search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்னாள் பிரதமர் வாஜ்பாய்"

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளை முன்னிட்டு, டிசம்பர் 24 அன்று பாராளுமன்ற வளாகத்தில் சிறப்பு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. #Parliament #AtalSammanSammelan #Vajpayee
    புதுடெல்லி:

    மத்தியில் காங்கிரஸ் அல்லாத கட்சியின் ஆட்சியின் பிரதமராக ஐந்தாண்டுகள் நீடித்த முதல் தலைவர் என்ற பெருமைக்குரியவர் அடல் பிஹாரி வாஜ்பாய். 25-12-1924 அன்று பிறந்த இவர் 1942-ம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் இணைந்து போராடி பொது வாழ்வில் நுழைந்தார்.

    லக்னோ தொகுதி எம்.பி.யாக 1991, 1996, 1998, 1999 மற்றும் 2004 ஆண்டுகளில் தொடர்ந்து ஐந்துமுறை இவர் வெற்றி பெற்றுள்ளார். பிரதமராவதற்கு முன்னர் வெளியுறவுத்துறை மந்திரியாக பதவிவகித்த வாஜ்பாய், உடல்நலக் குறைவால் அரசியலில் இருந்து விலகினார். இவர் கடந்த ஆகஸ்டு 16ம் தேதி மறைந்தார்.



    இந்நிலையில், பாராளுமன்ற வளாகத்தில் வரும் 24ம் தேதி வாஜ்பாய் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அன்று பல்வேறு துறைகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 25 பேருக்கு வாஜ்பாய் நினைவு விருதளிக்க உள்ளோம்.

    வாஜ்பாய் பற்றிய செய்திப்படம் திரையிடப்படும். இதில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, பல்வேறு மாநில கவர்னர்கள், முதல் மந்திரிகள், மத்திய மந்திரிகள் மற்றும் மாணவர்கள் பலர் வாஜ்பாய் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்கின்றனர் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். #Parliament #AtalSammanSammelan #Vajpayee
    முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மரண தினம் குறித்து சிவசேனா முன்னணி தலைவர்களில் ஒருவரும், கட்சிப்பத்திரிகையான சாம்னாவின் ஆசிரியருமான சஞ்சய் ராவத் சந்தேகம் எழுப்பியுள்ளார். #SanjaiRaut #AtalBihariVajpayee
    மும்பை:

    பல்வேறு உடல் நலக்கோளாறுகளால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், கடந்த 16-ந் தேதி மாலையில் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அவரது உடல் மறுநாள் டெல்லியில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.



    வாஜ்பாய் இறந்து 10 நாட்கள் கடந்திருக்கும் நிலையில், அவரது இறப்பு தினம் குறித்து சிவசேனா தற்போது சந்தேகம் கிளப்பி இருக்கிறது. அந்த கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரும், கட்சிப்பத்திரிகையான சாம்னாவின் ஆசிரியருமான சஞ்சய் ராவத், இது தொடர்பாக அந்த பத்திரிகையில் கட்டுரை எழுதியுள்ளார்.

    அதில் அவர் கூறும்போது, ‘வாஜ்பாய் ஆகஸ்டு 16-ந் தேதி இறந்தார். ஆனால் 12 மற்றும் 13-ந் தேதிகளிலேயே அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. சுதந்திர தினத்தன்று தேசியக்கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டு தேசிய துக்கம் அனுசரிப்பதை தவிர்க்கவும், பிரதமர் மோடி செங்கோட்டையில் உரையாற்றுவதற்காகவும், வாஜ்பாய் 16-ந் தேதி இந்த உலகை விட்டு சென்றுள்ளார் அல்லது அவரது இறப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

    இதன் மூலம் வாஜ்பாயின் மரண தினம் குறித்து மறைமுகமாக சிவசேனா சந்தேகம் கிளப்பி இருக்கிறது. பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான சிவசேனாவே வாஜ்பாய் மரண தினம் குறித்து சந்தேகம் கிளப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #SanjaiRaut #AtalBihariVajpayee 
    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தி இந்தியா முழுவதும் உள்ள சுமார் 100 நதிகளில் நாளை கரைக்கப்பட உள்ளது. #Vajpayee #RIPVajpayee #AtalBihariVajpayee
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 16-ந்தேதி மரணம் அடைந்தார். அவரது இறுதி சடங்குகள் மறுநாள் டெல்லியில் நடத்தப்பட்டன.

    அவரது உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில் இருந்து நேற்று முன்தினம் அஸ்திகள் சேகரிக்கப்பட்டன. அந்த அஸ்திகளை கரைக்கும் பணி நேற்று தொடங்கியது.

    உத்தரபிரதேசத்தில் நேற்று கங்கையில் வாஜ்பாயின் அஸ்தியை அவரது வளர்ப்பு மகள் நமீதா உறவினர்களுடன் சென்று கரைத்தார். அந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா, உத்தரபிரதேச முதல்-மந்திரி ஆதித்யநாத் யோகி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


    இதற்கிடையில் வாஜ்பாயின் அஸ்தி நாடு முழுவதும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஸ்ரீரங்கம், சென்னை, பவானி, வைகை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி ஆகிய 6 இடங்களில் வாஜ்பாய் அஸ்தி கரைக்கப்பட உள்ளது.

    இந்த நிலையில் வாஜ்பாய் அஸ்தியை 100 நதிகளில் கரைக்க வேண்டும் என்று பா.ஜ.க. மூத்த தலைவர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து அஸ்தி கரைப்பு நிகழ்ச்சிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

    அதன்படி வாஜ்பாய் அஸ்திகள் பிரிக்கப்பட்டு 29 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள சுமார் 100 நதிகளில் வாஜ்பாய் அஸ்தி நாளை (செவ்வாய்க்கிழமை) கரைக்கப்பட உள்ளது.

    இந்த நிகழ்ச்சிகளில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #Vajpayee #RIPVajpayee #AtalBihariVajpayee #VajpayeeAsthiimmersed
    டெல்லியில் உள்ள ஸ்மிருதி ஸ்தல் திடலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இன்று மாலை தகனம் செய்யப்பட்டது #AtalBihariVajpayee #RIPVajpayee
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (93) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமடைந்தததால் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 5.05 மணிக்கு அவர் மரணமடைந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்தது.

    டெல்லியில் மரணமடைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு ஜனாதிபதி, பிரதமர், துணை ஜனாதிபதி, உள்துறை மந்திரி, பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்பட பலர் இரங்கல் தெரிவித்தனர். அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

    டெல்லி பாஜக அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக இன்று வாஜ்பாய் உடல் வைக்கப்பட்டது. அங்கும் வெளிநாட்டு தலைவர்கள் உள்பட பலர் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

    இந்நிலையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் கட்சி அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி முடிந்ததும், அங்கிருந்து பிற்பகல் 2 மணிக்கு வாஜ்பாயின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் வாஜ்பாயின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

    அவரது இறுதி ஊர்வலம் சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராஷ்ட்ரீய ஸ்மிரிதி ஸ்தல் என்ற இடத்தை அடைந்தது. வாஜ்பாய் உடலை ராணுவ வாகனத்தில் இருந்து முப்படை வீரர்கள் இறக்கியபோது பிரதமர் மோடி துக்கம் தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுதார். அவருடன் இருந்த தலைவர்களும் கண் கலங்கினர்.



    ராணுவ இசை மற்றும் வேத மந்திரங்கள் முழங்க இறுதிச்சடங்குகள் நடைபெற்ற பின்னர், முப்படையை சேர்ந்த தளபதிகள் மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.

    இதையடுத்து, ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ஹமித் கர்சாய் மற்றும் பாகிஸ்தான், வங்காளதேசம், நேபாளம் உள்ளிட்ட வெளிநாட்டு பிரமுகர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். ராணுவத்தினரின் சோக இசை மீட்கப்பட்டபோது அங்கு கூடியிருந்த மக்கள் பாரத ரத்னா புகழ் வாஜ்பாய் புகழ் வாழ்க என முழக்கமிட்டனர்.

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்ட போது அனைவரும் எழுந்து நின்றனர். 

    வாஜ்பாய் உடல் மீது போர்த்தப்பட்டிருந்த தேசிய கொடி அவரது பேத்தி நிகாரிகாவிடம் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து அவரது உறவினர்கள் வேத மந்திரங்கள் ஓதி இறுதி சடங்கு செய்தனர். அவரது உடல் மீது சந்தன கட்டைகள் வைக்கப்பட்டு எரியூட்டப்படடது. இறுதியாக, 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது.

    வாஜ்பாய் இறுதி சடங்கில் பாஜகவின் அமித்ஷா, அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட தலைவர்கள், பல்வேறு மாநில முதல் மந்திரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். #AtalBihariVajpayee #RIPVajpayee 
    பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித்ஷா உள்பட ஆயிரக்கணக்கான பாஜகவினர் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இறுதி ஊர்வலத்தில் நான்கு கிலோமீட்டர் தொலைவு நடந்தே சென்றனர். #AtalBihariVajpayee #AIIMS #RIPVajpayee
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (93) உடல்நலக் குறைவால் கடந்த ஜூன் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமடைந்தததால் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 5.05 மணிக்கு அவர் மரணமடைந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்தது.

    டெல்லியில் மரணமடைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு ஜனாதிபதி, பிரதமர், துணை ஜனாதிபதி, உள்துறை மந்திரி, பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்பட பலர் இரங்கல் தெரிவித்தனர். அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

    டெல்லி பாஜக அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக இன்று வாஜ்பாய் உடல் வைக்கப்பட்டது. அங்கும் வெளிநாட்டு தலைவர்கள் உள்பட பலர் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.



    இந்நிலையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் கட்சி அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி முடிந்ததும், அங்கிருந்து பிற்பகல் 2 மணிக்கு வாஜ்பாயின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் வாஜ்பாயின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

    வாஜ்பாய் இறுதி ஊர்வலத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித்ஷா மற்றும் ஆயிரக்கணக்கான பாஜகவினர் சுமார் நான்கு கிலோ மீட்டர் தொலைவு நடந்தே சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. #AtalBihariVajpayee #AIIMS #RIPVajpayee
    முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி சடங்கை முன்னிட்டு, இன்று நடைபெறவிருந்த ரபேல் போர் விமானம் தொடர்பான காங்கிரஸ் கூட்டத்தை ராகுல் காந்தி ஒத்திவைத்துள்ளார். #AtalBihariVajpayee #AIIMS #RIPVajpayee #Congress
    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து வருபவர் ராகுல் காந்தி. பாஜக ஆட்சியில் நடைபெற்ற ரபேல் போர் விமானம் தொடர்பான ஊழல் குறித்து ஆலோசிக்கவும், ரபேல் போர் விமானம் தொடர்பான உண்மை நிலையை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் இன்று மதியம் டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்திருந்தது.

    இதற்கிடையே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நேற்று மாலை மரணமடைந்தார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். அவரது இறுதி சடங்கு இன்று மாலை டெல்லியில் நடைபெறவுள்ளது.



    இந்நிலையில், வாஜ்பாயின் இறுதி சடங்கை முன்னிட்டு, இன்று நடைபெறவிருந்த ரபேல் போர் விமானம் தொடர்பான காங்கிரஸ் கூட்டத்தை ராகுல் காந்தி ஒத்திவைத்துள்ளார். இந்த கூட்டம் நாளை நடைபெறும் என காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர். #AtalBihariVajpayee #AIIMS #RIPVajpayee #Congress
    முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை விரைவில் குணமடைய வேண்டும் என திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். #AtalBihariVajpayee #AIIMS #MKStalin
    சென்னை:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (93) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரக குழாய் நோய்த்தொற்று, சிறுநீர் பாதை நோய்த்தொற்று, மார்பு வலி உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் இருந்ததால் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

    பிரதமர் மோடி மற்றும் மூத்த மந்திரிகள் நேற்று அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று வாஜ்பாய் உடல்நிலை விசாரித்து வருகின்றனர்.

    இதற்கிடையே, இன்று வாஜ்பாய் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.



    இந்நிலையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை விரைவில் குணமடைய வேண்டும் என திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை மோசமடைந்து வருவது குறித்து வருத்தமடைகிறேன். விரைவில் அவரது உடல்நிலை குணமடைய வேண்டும் என அதில் பதிவிட்டுள்ளார். #AtalBihariVajpayee  #AIIMS #MKStalin
    முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை மோசமடைந்துள்ள நிலையில், பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஆகியோர் இன்று மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர். #AtalBihariVajpayee #AIIMS #VajpayeeHestyle #PMModi
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (93), உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரக குழாய் நோய்த்தொற்று, சிறுநீர் பாதை நோய்த்தொற்று, மார்பு வலி உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் இருந்ததால் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

    வாஜ்பாயின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நேற்று மாலை பிரதமர் மோடி மற்றும் மூத்த மந்திரிகள் அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று வாஜ்பாய் உடல்நிலை விசாரித்து வருகின்றனர்.

    இதற்கிடையே, இன்று வாஜ்பாய் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நிமோனியா தாக்கம் காரணமாக வாஜ்பாயின் இரண்டு நுரையீரல்களும் நல்ல நிலையில் இல்லை என்றும், சிறுநீரகங்களும் பலவீனமாக உள்ளதால் அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதையடுத்து வாஜ்பாய் குணமடைய வேண்டி பாஜகவினர் பிரார்த்தனைகளை நடத்தி வருகின்றனர்.



    இந்நிலையில், வாஜ்பாயின் உடல்நிலை மோசமடைந்துள்ள நிலையில், பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் மக்களவை சபாநயகர் சுமித்ரா மகாஜன் ஆகியோர் இன்று மருத்துவமனைக்கு வருகை தந்தனர். அவரது உடல்நிலை குறித்து விசாரித்து அறிந்தனர். 

    ஏற்கனவே, குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, பாஜக மூத்த தலைவர் அத்வானி, மத்திய மந்திரிகள் ஜே.பி.நட்டா, முக்தார் அப்பாஸ் நக்வி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உள்பட பல்வேறு தலைவர்கள் மருத்துவமனைக்கு வந்து விசாரித்து வருகின்றனர். #AtalBihariVajpayee  #AIIMS #VajpayeeHestyle #PMModi
    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் நலம் குறித்து அறிவதற்காக பிரதமர் மோடி நேற்று இரவு மீண்டும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்றார். #AIIMS #AtalBihariVajpayee #PMModi
    புதுடெல்லி:

    1998 முதல் 2004-ம் ஆண்டு வரை நாட்டின் பிரதமராக பதவி வகித்த வாஜ்பாய் (93), முதுமை காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். உடல்நிலை ஒத்துழைக்காததால் பொது வெளியில் எந்த நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கவில்லை. 

    அவருக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டபோதுகூட அவர் நேரில் வந்து விருதினை பெற முடியவில்லை. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வாஜ்பாயின் வீட்டுக்குச் சென்று விருதை வழங்கினார்.

    இதற்கிடையே, வாஜ்பாயின் உடல்நிலை சமீபத்தில் மோசமடைந்தது. இதனால் அவரை உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு டாக்டர் ரன்தீப் குலேரியா தலைமையிலான மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். எய்ம்சில் சிகிச்சை பெற்று வரும அவரை பிரதமர் மோடி உள்பட முக்கிய தலைவர்கள் நேரில் சென்று உடல்நிலை குறித்து விசாரித்தனர்.



    இந்நிலையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் நலம் குறித்து அறிவதற்காக பிரதமர் மோடி நேற்று இரவு மீண்டும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்றார்.

    இதுதொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறுகையில், பிரதமர் மோடி நேற்று இரவு 9 மணிக்கு மீண்டும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்தார். சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை வாஜ்பாய் உறவினர்களை சந்தித்து பேசினார். அப்போது வாஜ்பாய் உடல் நிலை முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார் என தெரிவித்துள்ளனர். #AIIMS #AtalBihariVajpayee #PMModi
    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்து வருவதால் இன்னும் சில தினங்களில் முழுமையாக குணமடைந்து விடுவார் என எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். #AIIMS #AtalBihariVajpayee
    புதுடெல்லி:

    1998 முதல் 2004-ம் ஆண்டு வரை நாட்டின் பிரதமராக பதவி வகித்த வாஜ்பாய் (93), முதுமை காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். உடல்நிலை ஒத்துழைக்காததால் பொது வெளியில் எந்த நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கவில்லை. 

    அவருக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டபோதுகூட அவர் நேரில் வந்து விருதினை பெற முடியவில்லை. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வாஜ்பாயின் வீட்டுக்குச் சென்று விருதை வழங்கினார்.

    இதற்கிடையே, வாஜ்பாயின் உடல்நிலை சமீபத்தில் மேலும் மோசமடைந்துள்ளது. இதனால் அவரை உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு டாக்டர் ரன்தீப் குலேரியா தலைமையிலான மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். வாஜ்பாயின் உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இந்நிலையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்து வருவதால் இன்னும் சில தினங்களில் முழுமையாக குணமடைந்து விடுவார் என எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
     
    இதுதொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா கூறுகையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நலமுடன் உள்ளார். அவரது உடல்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் உள்ளது. தொடர் சிகிச்சை காரணமாக சிறுநீரக தொற்று சரியாகி வருகிறது. ஒரு சில நாட்களில் வாஜ்பாய் வீடு திரும்புவார் என தெரிவித்துள்ளார். #AIIMS #AtalBihariVajpayee
    ×